search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகன் தாக்குதல்"

    கம்பைநல்லூர் அருகே வேலைக்கு செல்லுமாறு கூறிய தந்தையை ஆத்திரத்துடன் கீழே தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரை அடுத்த பெரமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 55). விவசாயியான இவரது மகன் ஆறுமுகம் (22). இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை பெரியசாமி மகனை கண்டித்தார். இதனால் பெரியசாமிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. 

    ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது தந்தை பெரியசாமியை பிடித்து தள்ளினார். இதில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கம்பைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெரியசாமியை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஆறுமுகம் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தனது தாய் பல ஆண்களுடன் பழகி வருவதாக அக்கம், பக்கத்தினர் கூறியதால் ஆத்திரம் அடைந்த நான் அவரை தீர்த்துக் கட்டினேன் என்று கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    திருப்பூர்:

    கைதான மாணவர் பிரவீன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது,

    எனது தாயின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் பல ஆண்களுடன் பழகி வருவதாக அக்கம்,பக்கத்தினரும் என்னிடம் கூறினர். இதனால் நான் அவரை எச்சரித்தேன். அதன் பிறகும் அவர் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் என்னை மிகவும் கேலி செய்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே சம்பவத்தன்று தாயை கயிற்றால் நெரித்து கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    திண்டுக்கல் அருகே சொத்து தகராறில் மகனை வெட்டி சாய்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள கோணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிராஜன். இவருக்கு சத்தியமூர்த்தி (வயது40), கணேசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சத்தியமூர்த்திக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். கணேசனுக்கு திருமணம் ஆகவில்லை.

    சத்தியமூர்த்தி அடிக்கடி தனது தந்தையிடம் பூர்வீகசொத்தை தனது பெயருக்கு எழுதி தரும்படி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி அடிதடி ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை கோணப்பட்டி அருகே சாமிராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சத்தியமூர்த்தி வழக்கம்போல் தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார்.

    மேலும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த சாமிராஜன் தனது மகன் என்றும் பாராமல் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சத்தியமூர்த்தியை அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாளால் வெட்டிய சாமிராஜன் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மகனையே தந்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    குன்னத்தூர் அருகே வீட்டுக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்த தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள சுக்காகவுண்டன்புதூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). பனியன் கம்பெனி ஊழியர். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு பிரகாஷ் (28) என்ற மகன் உள்ளார்.

    கைத்தறி தொழிலாளியான பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு காலதாமதமாக வீட்டுக்கு வந்தார். இதனை பழனிசாமி கண்டித்தார். இதனால் தந்தை- மகன் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. மீண்டும் மறுநாள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பழனிசாமியின் கழுத்து மற்றும் தலையில் வெட்டி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து தந்தையை வெட்டி விட்டு தலைமறைவாக உள்ள பிரகாஷை போலீசார் தேடி வருகிறார்கள்.

    குடிபோதையில் தகராறு செய்த தந்தையை மகன் தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவர் மகனின் கழுத்தை பிளேடால் அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருச்சி:

    திருச்சி செந்தண்ணீர்புரம் கோவன் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 57) லாரி டிரைவர். இவரது மகன் மணிகண்டன். இந்நிலையில் சேகர் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டார். இதை மணிகண்டன் தட்டிக்கேட்டார். அப்போது தந்தை மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கிரிக்கெட் மட்டையால் சேகரை தாக்கினார்.

    சேகர் பிளேடால் தனது மகன் மணிகண்டன் கழுத்தை அறுத்தார். அவர் வலி தாங்க முடியால் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ×